சாலைகள் திருப்பமின்றி
சரியே நீண்டிருந்தால்தஞ்சையும், பாளையும்
பார்த்திட இயலுமோ?
பூக்களில் திருப்பம்
காயாய் முடியும்
காய்களின் திருப்பம்
கனியாய் முடியும்
பூமியின் திருப்பத்தால்
பொழுதுகள் விடியும்
பொழுதுகள் மாற்றம்
பூமியில் தூக்கம்
வாழ்வினில் திருப்பம்
ஆண்டவர் விருப்பம்
வராதவர் வாழ்வினில்
ஆயிரம் குழப்பம்
S.M.சுரேஷ், புதுக்கோட்டை