உன்னதர் மகிமை
உதறித்தள்ளி
உலகக் குடிலை உய்விக்க
மானிடக் கோலத்தில் இறைக்குழந்தை
மண்ணில் தவழ்ந்திடும்
உலகின் மையப்புள்ளியில்
மரியின் கருவாய் கற்பகத் தருவாய்
நச்சு உலகைப் பிஞ்சுக் கரத்தால்
துடைத்து போட்டார்
வறிய நெஞ்சங்களே
வளமை கொஞ்சிட
வாழ்வின் வள்ளலை
உள்ளத்தில் கருத்தரி
காரிருள் துடைத்தெறி
-- முனைவர் ஆ. ஜான் துரை