பழைய கித்தார் (Guitar) இசைக்கருவி ஒருமுறை ஒரு ரூபாய்க்கு ஏலத்துக்கு வந்தது. ஆனால் அதை வாங்குவதில் ஒருவரும் கூட அக்கறை காட்டவில்லை. சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு முதியவர் அங்கு வந்து கவனிப்பாற்றுக் கிடந்த அந்த இசைக் கருவியை எடுத்து அழகாக இசை மீட்டினார். சீக்கிரத்தில் அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயை எட்டி விட்டது.
ரகசியம் என்ன?
அழகிய இசை!
ஏன்? அது அந்த முதியவரால் மட்டும் தான் சாத்தியமா?
ஆம்! அந்த இசைக் கருவியை வடிவமைத்தவரே அவர்தான்! எனவே அவர் கரம் பட்டபோது அதன் உண்மை மதிப்பு வெளிப்பட்டது.
ஒரு வேளை நம்முடைய வாழ்க்கையாகிய இசைக்கருவியில் சில நரம்புகள் அறுபட்டிருக்கலாம் அல்லது பயனற்று துருப்பிடித்திருக்காலாம். ஆனால் அதை உருவாக்கிய எஜமானனிடம் உள்ள படியே ஒப்படைத்தால் அதை இனியதாக மாற்றுவாரே!
இயேசுவின் கையில் நம்மை முழுவதுமாக ஒப்புகொடுப்போம். அவர் நம்மை நேர்த்தியாக மாற்றிக் கொடுப்பார்.