பரிசுப் பொருள்
Mr.Arul Manohar
Reaching out people

பணக்காரப் பெண் ஒருத்திக்கு அவள் பிறந்த நாளன்று,அவளை திருமணம் செய்யும் வாலிபனிடமிருந்து பரிசுப் பொருள் ஒன்று வந்தது. அதை அவள் பிரித்தபொழுது..... உருண்டை குண்டு ஒன்று இருந்ததைக் கண்டு அவள் ஏமாற்றமடைந்தாள்.

கோபமடைந்த அவள் அதைத் தூக்கி எரிந்தாள். அது வீட்டின் ஒரு மூலையில் சிதறியது. அப்பொழுது வெளியே உள்ள உறை பிரிந்து வெள்ளி பெட்டி ஒன்று தெரிந்தது. அவள் ஓடிப் போய் உடனே எடுத்தாள்.அதை அவள் பிரித்தபொழுது, பொன்னாலான பெட்டி ஒன்று வந்தது. அதையும் அவள் பிரித்தபொழுது, விலைமதிப்புள்ள வைரம் பதிக்கப்பட்ட மோதிரம் ஒன்று வெளிப்பட்டது. அதில் ஒரு கடிதம் இருந்தது. நான் உன்னை நேசிப்பதால் என்ற மூன்று வார்த்தைகள் மட்டும் அதில் எழுதப்பட்டிருந்தது.

பல நேரங்களில், இப்படித் தான் நாம் செயல்படுகின்றோம்.. நாம் வேதபுத்தகத்தை முதலில் படிக்கும்போது அது வினோதமாகவும், புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது போலவும் தோன்றும். ஆனால்,.  அதைப் பொறுமையுடன் படிக்கும்போது, புதைபொருட்களைத் தேடுபவர்கள் அழகிய விலைமதிப்புள்ள பொக்கிஷங்களை பெற்றுக் கொள்ளுவது போல, நாமும் அறிய பல உண்மைகளை கண்டுபிடிக்கலாம். நாம் தேவனின் தெளிவான வெளிப்பாட்டையும் உணர்ந்து கொள்ளலாம்.


Mr.Arul Manohar with heart to Serve Lord has been in the ministry for over 2 decades. Working at Evangelical Union ( EU ), was the editor for their Tamil Magazine and their National English Magazine. Now he is Serving the Lord as General Secretary of Evangelical Union.