சாது சுந்தர்சிங் ஒருமுறை தன் நண்பருடன் இரவு நேரத்தில் கடும் குளிரில் இமயமலைப் பகுதியில் ஒரு கிராமத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தார். ஏதோ ஒன்று காலில் தட்டுப்படவே நின்று கவனித்தார். அது, குளிரின் காரணமாக நடுங்கிக் கொண்ட அரை உயிருடன் கிடந்த ஒரு மனிதனின் உடல். சாதுவின் நண்பர் அங்கே நிற்க மறுத்து தன் பயணத்தை தொடர்ந்து விட்டார். ஆனால் சாதுவோ மனதுருகி அந்த மனிதனைத் தன் தோளின் மீது போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் நடக்கும் போது அவர் தோள் மீது இருந்த மனிதன் உடம்பு உராய்ந்ததினால் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த சாதுவின் உடம்பு மெதுவாக சூடேறி பலப்பட்டது. அதுபோலவே சாகும்நிலையில் இருந்த அந்த மனிதனும் பிழைத்துக் கொண்டான்.
ஆனால் கிராமத்தை வந்தடைந்த போது அவருடைய நண்பர் குளிரின் காரணமாக இறந்து கிடப்பதை கண்டார்!
ஒரு உண்மையான சீஷன் தன்னைத்தான் வெறுத்து தன் திறமைகளையும் தாலந்துகளையம் தியாகம் செய்வான் துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுவான் நாம் எப்படி இருக்கிறோம்?
You deny Christ,
When you fail to deny yourself for Christ.