இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
Bro.A.Stanley Chellappa
Blessed Assurance

"இந்த ராகம் என்ன கூறுகிறது?"
"ஏன், "இயேசு என்னுடையவர்", என்ற நல் உறுதியை எடுத்துரைக்கிறது.

இசையை மீட்டிய தன் சிநேகிதியுன் கேள்விக்கு  தயக்கமின்றிப் பதிலுரைத்த பார்வையற்ற பாடலாசிரியை பேனி கிறாஸ்பி, தொடர்ந்து அப்பாடலையும் இசைக்கேற்றபடி துரிதமாக எழுத ஆரமித்தார்..

எட்டு வயதில் தனது முதல் கவிதையை எழுதிய பேனியின் உள்ளத்திலிருந்து , பாடல்கள் வெள்ளம் போல ஊற்றெடுத்து வந்து கொண்டேயிருந்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, நற்செய்திப்பணி ஊக்க ஆராதனைகள் அனைத்திலும், விசுவாசிகள் விரும்பிப் பாடும் பாடல்கள்  இவரது பாடல்களே. அவற்றிலும் இப்பாடல் மிக  அருமையானது; பிரபலமானது; நம்பிக்கையின் நங்கூரமாக அமைந்துள்ளது.

95 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, ஆண்டவரின் திருப்பாடல் ஊழியத்தை வாஞ்சையோடு செய்து முடித்த பேனி, 12.2.1915 அன்று மரித்தார். கனெக்டிகட்டிலுள்ள பிரிட்ஜ் போர்டில் அவரை அடக்கம் செய்தார்கள். பார்வையற்றவராக வாழ்ந்தாலும், ஆண்டவர் தனக்குத் தந்த தாலந்துகள் அனைத்தையும் முழுமையாக அவருடைய நாம மகிமைக்கென அர்ப்பணித்து உபயோகித்தார்.

எனவே, பேனியின் கல்லறையில் மரியாளைப் பாராட்டி ஆண்டவர் கூறிய, கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" - மாற்கு 14:8

பேனி எழுதிய பாடல்களில், "போற்றும் போற்றும் புண்ணிய நாதரை போற்றும்", "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக் கொள்ளும்", "இயேசுவின் கைகள் காக்க" போன்ற பாடல்கள் இன்றும் உலகெங்கும் பிரபலமாக உபயோகத்தில் உள்ளன.


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com

Social Share