நண்பனே! உன்னைக் குறித்து பாரமுள்ள ஒருவர்

உன் வாழ்கைகையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும். வாழ்கையில் சமாதானமில்லை. பாவப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பரிசுத்தமில்லாமல் கலங்குகிறாய். “என்னால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே., என்னை யார் விடுவிப்பார்கள்?” என ஏங்குகிறாய். சரீர வியாதியினால் வேதனைப்பட்டு அங்கலாய்க்கிறாய். குடும்பப் பிரச்சனை, பல தேவைகள் மத்தியில், என்ன செய்வது? என்று சமாதானமில்லாமல் துக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய். “என்னை நேசிக்க யார் உண்டு? என் பாரத்தை மாற்ற யார் இருக்கிறார்கள்? என்று கலங்கும் உன் மீது அன்புள்ள, அக்கரையுள்ள ஒருவர் உண்டு. ஆம்! அவர்தான் ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து. இயேசு உன்னை நேசிக்கிறார். பாரத்தோடிருக்கும் உன்னை அழைக்கிறார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) »»


நீங்கள் விடுதலையாவீர்கள்

ஒவ்வோரு நாளும் அழுகின்ற ஜனங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். யார் என்னை விடுதலை யாக்குவார்கள். யார் என் பாவ வாழ்க்கையை ஜெயிக்க உதவுவார்கள். புனிதமான வாழ்க்கை என்னால் வாழ முடியுமா? என் சொந்த வாழ்க்கை பாவத்தில் அழிந்து கொண்டிருக்கின்றதே?. எனக்கு ஒரு விடுதலை உண்டா? நண்பரே, நீஙகள் கூட இன்று அழுதிருக்கலாம் இல்லையா?. வெளியே இன்பமாக காணப்பட்ட அந்த பாவ வாழ்க்கை இன்று உங்கள் மனதிற்குள் நரமாக இருந்து உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றீர்கள். உங்களுக்கு வேலை, படிப்பு, பணம் எல்லாம் உண்டு. இருப்பினும் மனதில் நிம்மதி இல்லை. தூக்கமின்றி காணப்படுகின்றீர்கள். உங்கள் பாவம் உங்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது. உங்கள் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்று புலம்பிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆம் உங்களுக்கு விடுதலை உண்டு. »»

Social Share