என் குடும்பம் இனி இணையுமா
Shalom Family Enrichment Ministries
Reaching out people

நான் ஓர் மருத்துவர்.. 2 கிளினிக் வைத்திருக்கிறேன்.. என் மனைவி, ஷீலா ஓர் M.Sc, M.Phil, B.Ed,.. கஷ்டப்பட்ட குடும்பம் என்பதினால் ஷீலாவின் மேல் ஓர் பரிதாப எண்ணம்.. ஆகவே என் பெற்றோரிடம் என் பரிதாப எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன்.. அவர்களாக பகிர்ந்து கேட்டு வந்தால் யோசிப்போம்" என்றனர்.. 3 மாதத்தில் எங்கள் பெற்றோரை ஷீலாவின் பெற்றோர் அணுகினர்.. திருமணம் ஒழுங்கானது.. மருத்துவராகிய எனக்கும் ஆசிரையையாகிய ஷீலாவிற்கும் திருமணம், மிக எளிமையாக, ஆனால் அர்த்தமுள்ளதாக எங்கள் ஆலயத்தில் நடைபெற்றது.. "மகிழ்ச்சியான குடும்பம்"- என்று துவக்கத்தில் பலர் எங்கள் காது கேட்கவே சொன்னதை கேட்ட எனக்கு உள்ளத்தில் ஓர் பெருமிதம்.. அதிக மகிழ்ச்சி...

முதல் பிள்ளை பெண் பிள்ளை..

அடுத்து 3 ஆண்டுகளில் 2 வது பெண் குழந்தை...

"உங்களுக்கு பிள்ளை பெற்று வளர்த்துக் கொடுக்கத்தான் நான் இருக்கின்றேனா?..எனக்கு வேலை எடுத்துக் கொடுங்கள் .." என்று என் மனைவி கோபத்துடன் பேசினார்கள்.. ஏன் தானோ  வேலைக்குப் போகவேண்டும் என்ற இந்த எண்ணம்?!

காலை 9 மணிக்கு முதல் கிளினிக்கிற்கு சென்றால், மதியம் 1:30 மணிக்கு வருவேன்.. சாப்பிட்டு ஓய்வு எடுப்பேன்.. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டாவது கிளினிக்...

எங்கள் வருமானம். கை நிறைய வர ஆரம்பித்தது.. எனக்கு என் மனைவியிடம் பேசவே நேரம் கிடையாது.

எப்போதாவது ஓரிரு வார்த்தை சொல்ல  வேண்டியது நேர்ந்தால் என் ஷீலாவிற்கு வருமே கோபம்..!

ஓர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாங்கிக் கொடுத்தேன்.. சம்பளம் ரூ.18,000/- ஆனாலும் ஷீலாவிற்கு வரும் கோபம் அடங்குவதாகத் தெரியவில்லை...

அடுத்து 3வது பெண் குழந்தை..!

இப்போது எங்கள் வீட்டில் எங்களுக்குள் பேச்சே கிடையாது...

என் மாமனார், ஒவ்வொரு ஆண்டும், திருமணம் ஆனதிலிருந்து, என் மனைவியின் வேலைவாய்ப்பிற்கான பதிவை 1100 கி.மீ தூரத்தில் உள்ள ஓர் கிறிஸ்தவ கல்லூரியில் தொடர்ந்து பதிவி செய்து வந்தார்... என் மனைவி அந்த வேலையை அதிகம் எதிர்ப்பார்த்தார்கள்...

கடந்த ஆண்டு, அரசாங்க சம்பளத்துடன் அக்கல்லூரியில் வேலை கிடைத்தபோது.. " நான் அவ்வள தூரம் போய் வேலை பார்க்க வேண்டாம்.. பிள்ளைகளும் கணவரும் தான் முக்கியம், அதுவும் நான் மருத்துவர் ஆயிற்றே.." என்று சொல்லி பார்த்தேன்.. ஷீலாவோ அடம் பிடித்தாள்..

"சரி" என்று அரை மனதோடு அனுப்பி விட்டேன்..

இப்போது, என் மனைவியும் என் செல்லப் பிள்ளைகள் 3 பேரும் என் மாமனார் வீட்டில்...

மனைவிக்கு கல்லூரியில் அரசாங்க சம்பளத்தில் வேலை...
 
நானோ 1100 கி.மீ. தூரத்தில், மருத்துவர்.. எனக்கு சமையலுக்கு ஒரு ஆயா.. தினமும் சமைத்துக் கொடுக்கிறார்கள்.. என் மனைவிக்கு போன் பண்ணவும் இஷ்டமில்லை...

"கோபக்காரி, போய் தொலையட்டும்" என்று தான் அனுப்பினேன்..! ஆனால், இன்று எனக்கு பைத்தியம் பிடித்து விடும்போல் தெரிகிறது.. இரவில் தூக்கமே இல்லை..

மூன்று பிள்ளைகளும் 3 செல் போன்கள் வாங்கிக் கொடுத்துருக்கின்றேன்...

இனி என் குடும்பம் எப்போது இணையுமோ?


டாக்டர் ராஜேஷ், பூனா.


A group of like-minded men with concern and burden for families joined together under the leadership of Mr. R. Rajasingh and founded the Shalom Family. They could be reached at 91- 9382720809.