1. மாமனார், மாமியாருக்கு உணவு சமைத்து, சரியான நேரத்தில், இன்முகத்துடன், நீங்களே அன்புடன் பரிமாறி, பாசத்தை, வளர்க்கலாமே….!
2. சுகவீனமான நேரங்களில், முகங்கோணாமல், தாய், தகப்பனைக் கவனிப்பது போல, பாசத்துடன் அவர்களை கவனிப்பதை உங்கள் வீட்டார் பார்த்து மனம்; மகிழட்டும்…!
3. உங்களைத் திருத்தும் பொழுது ‘சரி அத்தை, சரி மாமா’ என்று சொல்லி திருத்திக் கொள்வது எத்தனை உயர்வு வி;ட்டு விடாதிருங்கள் உயர்வின் படிகளை…
4. முறுமுறுப்புகள், விரைப்புகள் வேண்டவே வேண்டாம்… இவைகள் காயங்களை உண்டாக்குமே… இக்காயங்கள் ஆற பல ஆண்டுகள் கூட ஆகிவிடுமே…!
5. நீங்கள் அவர்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்வீர்கள் எனில் அவ்வப்போது ‘சாப்பிட்டீர்களா? எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்பது உறவையும், அன்பையும் கூட்டுமே…!
6. உங்கள் அப்பா, அம்மா விடம் அன்பு செலுத்துவது போல மாமனார், மாமியாரிடமும் சிறப்பாய் அன்பு செலுத்த வேண்டுமே… இவைகளை செயலிலும் காண்பிக்க மறந்து விடாதிருங்கள்… துணிமணிகள் வாங்கிக் கொடுப்பதும், அன்பளிப்புகள் கொடுப்பதும் இவைகளில் அடங்குமே….
7. உங்கள் சொந்த பிள்ளைகளிடமோ, உங்கள் பெற்றோரிடமோ, உங்கள் மாமனார் மாமியாரைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ ஒருபோதும் குறை கூறாதிருங்கள்… மாறாக, புகழ்ந்துப் பேச குறிப்புகளைக் கண்டு, சொல்லி விடுங்கள்… உங்கள் வீட்டில், பரலோக வாசனை வீசுமே….!
8. வீட்டிற்கு வருபவர்களிடம்… “எங்க மாமா”, “எங்க அத்தை” என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்… இது அவர்களை பண்ணுவதின் மற்றொரு பங்கே…!
9. அவ்வப்போது உங்கள் மாமா, அத்தையை வாய் விட்டு பாராட்ட மறக்க வேண்டாம்… இது அவர்களுக்கு ஓர் ‘உன்னத Boost’
10. உங்களோடு தங்கி இராமல், தூர இடத்தில் இருந்தால், அடிக்கடி அழைத்து நலம் விசாரியுங்கள்… வாரா வாரம் கண்டிப்பாக அழைத்து பேசுங்கள்… சட்டென்று போனை வைக்கவேண்டாம்…
11. உங்கள் கணவர், அவருடைய பெற்றோரைப் போய் பார்க்க எண்ணினால், தடை பண்ணாமல் போய் வர உற்சாகப்படுத்துங்கள்…
12. அடிக்கடி ‘அத்தை’, ‘மாமா’ என்று அழையுங்கள்…அவர்கள் ஆயிரம் Uncle, Aunty களில் ஒருவரல்ல… உங்கள் கணவரின் பெற்றோர் என்பதை மறந்து விடாதிருங்கள்… உரிமை பாராட்டுங்கள்…