பிரோனோகிராபி ( பாகம்:1)
அருள்திரு சி. இராஜசேகரன்
Family Pages Article Image

வலைத்தளங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகிற வலைத்தளம் பிரோனோகிராபி வலைத்தங்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பிரோனோகிராபி என்பது காமக் காட்சிகள் நிறைந்தது.  இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்ப்பது கடினம் மற்றும் செலவு என்ற காலம் மலையேறிப் போய் கைகளில் உள்ள கைப்பேசியின் வாயிலாக காமக் காட்சிகளையும் கதைகளையும் எந்த எல்லைவரையும் பார்க்கக்கூடிய வசதிகள் நம் தொழில் நுட்பத்தால் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தொழில்நுட்பங்கள் நம் வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திற்காகத்தான், இழிவான செயலுக்கல்ல.

வலைத்தளங்களில் இப்படிப்பட்ட காமக் காட்சிகளை வயது, பாலினம், தொழில், என எந்த வித்தியாசமும் பாராமல் மக்கள் பார்க்கின்றனர். கணிணியைத் திறந்தவுடனேயே காமக் காட்சிகள் நம் கண்கள் முன்பாக பளிச்சிடுகிறது. அதை அசட்டை செய்வது எளிதாக இல்லை. அதனை ஒரு முறை தொட்டுவிட்டால் போதும் அது நம்மை தொடர்ந்து வரும். நாம் நினைத்தாலும் அதனிடமிருந்து விலகுவது கடினம்.

காமக் காட்சிகளைக் காண்பதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. முதலாவது அது நம்முடைய தனிப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகளையும், கௌரவத்தையும், இலட்சியத்தையும், குணங்களையும் மற்றும் பழக்கவழக்கங்களையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது. அது தொடர்ந்து குடும்ப வாழ்வையும், அதனைத் தொடர்ந்து எதிர்கால தலைமுறையையும், இறுதியாக ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.

காமக்காட்சிகளினால் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் தீமைகள்

‘கண்கள் ஒரு மனிதரின் வாழ்விற்கான வெளிச்சமாயிருக்கிறது. கண்கள் நன்றாக இருந்தால் சரீரம் முழுவதும் நன்றாக இருக்கும்’ என்று இயேசுநாதர் கூறுகிறார். நாம் காணும் காமக் காட்சிகள் நம் மனதில் கூடாரம் போட்டு, நிரந்தரமாகத் தங்கிவிடும் போது அது நம்மை மீளா நிலைக்குக் கொண்டுவந்துவிடும். காமத்திற்கு இடம், நேரம், உறவு என்றில்லை.

* காமக் காட்சிகள் நம் எண்ணங்களையும், யோசனைகளையும், சிந்திக்கும் திறனையும் பாதிக்கிறது. மனித வளம் மேம்படவிடாமல் தடைசெய்கிறது.

* காமக் காட்சிகள் நம் சரீரத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது: கண்களில் டொக்கு விழுகிறது,  கனவில் காமக் காட்சிகள் வந்து செல்கிறது, அதனால் விந்து வெளியாகி உயிரனு விரயமாகிறது.

* காமக் காட்சியைக் காணுவதால் சுயப்புணர்ச்சி, ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் போன்ற பாவப் பழக்கத்திற்கு அடிமையாவதால் காம உணர்ச்சி வீணாக்கப்பட்டு, திருமண உறவில் பயம் ஏற்படுகிறது, அதனால் ஒருவருக்கொருவர் அதிருப்தியை ஏற்படுத்துகிறார்கள். குடும்ப உறவில் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. சுயமாக சுகம் காணுவதால் திருமண உறவில் பற்றற்ற நிலையும் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. பல்வேறு பாலியல் வியாதிகள் உருவாகிறது.

* காமக் காட்சிகள் மனநிலையைப் பாதிக்கிறது: பார்ப்பவர்களை எல்லாம் கண்ட காமக் காட்சியுடன் தொடர்புபடுத்தி மனக்கண்களில் பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுதல், எதிலும் காமக் காட்சியையே தேடுவதும், அக்கோணத்திலேயே அனைவரையும் நோக்கவும் மனது பழக்கப்படுகிறது. இதில் தாய் தகப்பன், அண்ணன் அக்கா, தம்பி தங்கை, அத்தான் அண்னி, மாமா அத்தை, ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, பூசாரி பக்தர் என்ற அனைத்து உறவுகள் என்ற பாகுபாடு அற்றுப்போகிறது. ‘ஒருவரை காம உணர்ச்சியோடு பார்த்தாலே அவரோடு உடலுறவு கொண்டதாகக் கொள்ளப்படுகிறது, அதற்குப் பெயர் விபச்சாரம்’ என்று இயேசுநாதர் கூறுகிறார்.

* காமக் காட்சிகளால் மனித உறவுகள் பாதிக்கப்படுகிறது. அநேக நல்ல குணங்கள் இருந்தும் காமக் காட்சிகளை திருட்டுத்தனமாகப் பார்ப்பவர்கள் வெளிப்படையாகத் தெரியவரும் போது அவர்கள் அவமரியாதை, அவமானம், அருவருப்பு அடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

* காமக் காட்சிகளால் நம் தனிப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகளை குறைத்து, மனித நேயத்தை மறைத்து, வாழ்வின் இலட்சியத்தை இழக்க நேரிடுகிறது.

* விலைமதிப்பில்லாத நேரத்தை வீணடிக்கிறது.

* உறக்கம் கெடுகிறது. அதனால் சிந்திக்கும் திறன் குறைகிறது. கோபமும், எரிச்சலும், ஆவேசமும் கூடுகிறது. தீய குணங்கள் வளர்கிறது. இதன் விளைவால் சில சமயங்களில் கொலை, கொள்ளை போன்ற தீய காரியங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

* தனிமையைத் தேடுதல் அல்லது தனிமையை வெறுத்தல் போன்ற உளவியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

(தொடரும்)


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.