1. யோவான் 8.31 - நிலைத்திருத்தல்
2. லூக்கா 8.23 - பின்பற்றுதல்
3. மத்தேயு 11.29 - கற்றுக் கொள்ளுதல்
4. யோவான் 13:34,35 - அன்புகூருதல்
5. யோவான் 15:8 - கனிகொடுத்தல்
இந்த 5 வசனங்களின் குறிப்பிடங்களையம் கவனியுங்கள். அதிகார எண்களைப் பார்த்தீர்களா? யோவான் சுவிசேஷத்தில் எத்தனை முறை வருகிறது என்று பாருங்கள். ஒவ்வொரு வசனத்திலுமுள்ள முக்கிய கருத்தைக் கவனியுங்கள்.
சீஷத்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் சீஷன், சீஷர்கள் என்ற வார்த்தைகள் பலமுறை வருகின்றன. யோவான் சுவிசேஷத்திலும், அப்போஸ்தலர் நடபடிகளிலும் பலமுறை வருகின்றன. எங்கெல்லாம் வருகின்றன என்பதைக் கண்டுபிடித்து குறித்துக் கொள்ளுங்கள்.
சீஷனாய் மாறுவேன் நான்
சீஷனாய் மாற்றுவேன் நான்
என்னாலே ஒன்றும் இல்லையே
உம்மாலே எல்லாம் கூடுமே
சீஷன் யார்? சீஷன் எப்படிப்பட்டவன்?
சீஷன் என்ன செய்ய வேண்டும்.
சீஷன் வேதாகம உபதேசத்தில் நிலைத்திருக்கிறார். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி : நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். - யோவான் 8:31
சீஷன் சுயவெறுப்பின் பாதையைத் தெரிந்து கொண்டு ஆண்டவரைப் பின்பற்றுகிறான்: பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். -லூக்கா 9:23
சீஷன் ஆண்டவரிடமிருந்து கற்றுக் கொள்கிறான்: என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். - மத்தேயு 11:29
சீஷன் ஒருவரிலொருவர் அன்பு கூறுகிறார்கள்: நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார் - யோவான் 13:34,35.
சீஷன் கனி கொடுக்கிறான்: நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கு சீஷராயிருப்பீர்கள். - யோவான் 15:8.