பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் ஆப்பிரிக்காவில் காலணி விற்பனையில் ஈடுபடும் எண்ணத்துடன் இரண்டு வியாபாரிகளை அங்கு அனுப்பியது. சில நாட்களில் அவர்களில் ஒருவன் "இங்கு காலணி விற்பனையில் ஈடுபட முடியாது. இங்கு யாருமே காலனி அணிவதில்லை. இவர்கள் கலாச்சாரத்துக்கு இது சரியாக வராது: எனவே நான் திரும்பி வந்து வேறு நாட்டுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்று பதில் எழுதிவிட்டான்.
மற்றவனோ, "உடனடியாக எனக்குப் பல வடிவங்களில் பல வண்ணங்களில் பல அளவுகளில் காலணிகளை அனுப்பி வையுங்கள். ஏனெனில் இங்கு யாருமே காலணிகள் அணிவதில்லை. அவர்களுக்கு இதை அறிமுகப்படுத்தினால் நிச்சயமாக நம் வியாபாரம் பெருகும்", என்று எழுதியிருந்தான்.
நம் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?. மாறுபாடாக பின்நோக்கி யோசிப்பதைவிட்டுவிட்டு நேராக நல்லதை சிந்திக்க இப்புத்தாண்டில் தீர்மானம் எடுப்போம்.
சோம்பேறித்தனத்தை விட்டுச் சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்வோம்!
"விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்" - நீதி 16:20.