பரிசுத்த வேதாகமத்தில் 31,173 வசனங்கள் உள்ளன. அவைகளில் ஒரு சில வசனங்கள் கருத்தாழம் நிறைந்த ஆதார வசனங்களாய் இருக்கின்றன. அதில் ஒன்றைத் தெரிந்துகொண்டு அதை ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம். யோவான் 3:16 என்ற வசனத்தை ஆராயும்போது கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டு ஆராயலாம்.
1. இந்த வசனத்தின் முக்கியக்கருத்து என்ன?
2. வாக்கியங்களில் அமைப்பு எப்படியிருக்கிறது?
3. இந்த வசனத்தை யாரிடம் சொன்னார்கள்?
5. இந்த வசனத்தை ஏன் சொன்னார்கள்?
6. இவ்வசனத்தை எந்தச் சூழலில் சொன்னார்கள்?
7. இந்த வசனம் வரும் பத்தி அல்லது
அதிகாரத்தின் முக்கியக்கருத்து என்ன?
8. இந்த வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய மற்ற வசனங்கள் யாவை?
9. இந்த வசனத்தில் புரிந்துகொள்ள சற்று கடினமாகத்
தோன்றும் கருத்துக்கள் அல்லது வார்த்தைகள் யாவை?
10. காலம், இடம் போன்றவைகளைக் குறிக்கும் வார்த்தைகள் யாவை?
ஒரு வசனத்தை ஆராய்வதற்கும், தியானிபதற்கும் சற்று வித்தியாசம் உண்டு. மாம்பழத்தைப் பற்றி ஆராய விரும்பும் ஒரு நிபுணர் அதைப் பற்றி பல தகவல்களை சேகரிப்பார். இரசாயன விவசாய, தாவர அடிப்படைகளில் அப்பழத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வார்.
அதே சமயத்தில் ருசியான மாம்பழங்களை அவர் ரசித்து சாப்பிடவும் செய்வார். ஒருவேளை ஒரு பழத்தை ருசித்ததினால் ஆராய்ச்சிக்குள் அவர் இறங்கியிருப்பார். அல்லது ஆராய்ச்சி செய்யும்போது பழத்தின் ருசியை அறிந்து அனுபவித்திருப்பார்.
ஒரு வசனத்தைப் பலமுறை வாசித்து மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து தியானித்து ஆராயும் போது அந்த வசனம் உள்ளத்திலேயே தங்கிவிடும்.
நீங்கள் ஆராயக்கூடிய சில வேதவசனங்கள்:
அப்போஸ்தவர் 1:8, யோவான் 5:4, ரோமர் 12:1, IIதீமோத்தேயு 3:16,17.
ஒரு வசனத்தை எடுத்து அதற்கு ஒத்த வசனங்களை எடுத்துப் பார்ப்பது மிகவும் நல்லது. அதற்கு உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தைப் பாருங்கள.;
பாவஞ்செய்யாதபடிக்கு...
சங்கீதம் 139:11 - நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
சங்கீதம் 39:1 - என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு...
யாத் 20:20 - நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு...
I கொரி 15:34 - நீங்கள் பாவஞ்செய்யாமல்...
I யோவான் 2:1 - என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு....
விசுவாசம்
மத்தேயு 15:28 - ஸ்திரியே, உன் விசுவாசம் பெரிது.
மத்தேயு 9:23 - நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும்.
மாற்கு 5:34 - விசுவாசம் உன்னை இரட்சித்தது.
ரோமர் 1:17 - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.