1927 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் அசிபி என்னும் கறுப்பு இன மனிதன் ஒருவன் ஒரு வித மஞ்சள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டான்.இதன் காரணத்தை அறிய அமெரிக்காவின் பல மருத்துவ நிபுணர்களின் உதவி நாடப்பட்டது. முடிவில் அவன் உடலில் இருந்து இரத்த மாதிரியை எடுத்து குரங்குக்குச் செலுத்தினர். குரங்கில் எற்படும் மாற்றத்தைக் கண்டு அதற்கேற்ப அவனுக்குச் சிகிச்சை அளித்தனர்.விரைவில் அவன் குணம் பெற்றான். ஆனால் குரங்கு இறந்து விட்டது.
அதன்பின் அசிபியின் இரத்த மாதிரியைக்கொண்டே உலகின் பல பகுதிகளிலும் பல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இந்நாள் வரைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அந்த இரத்த மாதிரியில் இருந்த கிருமிகளை அழிக்கும் மருந்தைக் கண்டுபிடித்து அதையே பயன்படுத்துகின்றனர்.
ஒரு மனிதனின் இரத்தம் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காக்கும் அருமருந்தாக மாறி விட்டது!
"இயேசுவின் இரத்தத்தாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது." - எபே 1:7