கிறிஸ்தவ தியானம் : எப்பொழுது?
Dr. செல்வின்
Be Strong

தியானம் செய்வதை 2 விதங்களில் செய்யலாம்.

1. ஒரு நேரத்தை, இடத்தை, நிலையை தெரிந்துகொண்டு திட்டமிட்டு தியானம் செய்தல்.
2. நாம் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும் அமைதியாக தியானித்தல்.


ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிட வேண்டும். அதிகாலை நேரம் மிகச்சிறந்தது;  இரவில் அமைதியான வேளைகளும் நல்லது. எந்த இடையூறும் இல்லாமல் நேரத்தை செலவிட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லா விட்டால் ஒரு சில நிமிடங்கள் ஒரு தனி இடத்திற்கு நடந்து சென்று தியான நேரத்தை செலவிடலாம்.

எப்போழுது தியானம் செய்ய வேண்டும்?
* காலையில் எழுந்தவுடன்
* அனுதினம் செய்யும் செயல்களோடு
* ஜெபவேளை
* வேதம் வாசிக்கும் போது
* நடக்கும் வேளைகளில்
* பயண நேரங்களில்
* பல சூழ்நிலைகளில் (இயற்கை காட்சிகள், தோட்டம்)

தியானம் என்ற வார்த்தையின் பொருள்

அசைபோடுதல் : மாடுகள் அசைபோடுவதைப் பற்றி அறிந்திருக்கிறோம். சாப்பிட எடுத்துக் கொண்ட உணவை சுவைத்து ஓரிடத்தை ஒதுக்கி வைத்து மீண்டுமாய் அதை அரைத்து, சுவைத்து சுவைத்து உட்கொள்ளுவது. ஜீரணத்திற்கு இது அதிக உதவியாய் இருக்கிறது. அதைப்போல பார்க்கிற, வாசிக்கிற, கேட்சிறவைகளை மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்து விளக்கிக் கொள்வது.

SIACH – சயாக் என்ற ஏபிரெய வார்த்தையின் பொருள் பணிந்து, குனிந்து என்பதாகும்.
(ஆதியாகமம் 24:63)
HAGAH – ஹாகா என்ற எபிரெய வார்த்தையின் பொருள் முணுமுணுப்பது என்பதாகும். நாம் தியானிக்க விரும்புவதை வாய்விட்டு உச்சரித்து நமக்குள்ளேயே சொல்லிக் கொள்வது. (சங் 103:1,2)

TO MEDITATE: TO Mutter, To Muse, To Utter, To Imagine, To Commune, To Ponder, To Think deeply,  To devise, To make / find connection.

 


Dr.Selwyn founder of Follow-up Ministries Trust, Oddanchatram ( India ), is a Bible Teacher and author of many christian books. Innovative and simplified bible teaching methods taught by him has helped many christians and non-believers alike to know more about God. He could be reached at 91-4553-240623.