1. பிதாவின் அன்பு: "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்" என்றார்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்:; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்".-யோவான் 14:21,23.
2. உறுதி: உங்கள் வாழ்க்கை தேவனுடைய வார்த்தையாகிய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட வேண்டும். "ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கண்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது"(மத்தேயு 7:24,25) என்று இயேசு கிறிஸ்து போதித்தார்.
3. கனிகொடுத்தல்: நீங்கள் கர்த்தருடைய வேதத்தின் மேல் பிரியமாயிருந்து, இரவும் பகலும் வேத வசனங்களைத் தியானித்தால் நிறைவையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை ஆற்றங்கரையிலே நடப்பட்டு, எப்பொழுதும் இலையுதிராமல் தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்கிற மரத்தைப் போல செழிப்புள்ளதாய் இருக்கும். உங்கள் செயல்களிலெல்லாம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(விளக்கம்) -சங்கீதம் 1:2,3.
4. வளர்ச்சி: நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். -1 பேதுரு 2:3.
5. பரிசுத்தம்: நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். -சங்கீதம் 119:11