இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா
Bro.A.Stanley Chellappa
Reaching out people

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!
.......

லண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர்.இந்த முதல் ஆராதனைக்கென்று, சிறப்பு பாடலாக சார்லெஸ் எழுதிய பாடல் தான் இந்தப்பாடல். சார்லெஸ் வேறு யாருமல்ல. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி, மெத்தடிஸ்ட் சபையின் (Methodist denomination) ஸ்தாபகர்களில் ஒருவரான சார்லெஸ் வெஸ்லிதான் அவர்.

இந்த இரும்பு ஆலை ஆலயத்தில் வெஸ்லியினர் கூடிய நாட்களில், சார்லெஸ் பல புதுப்பாடல்களை எழுத அனைவரும் அவ்வாராதனைகளில் உற்சாகமாகப் பாடினார்கள். இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு பாடல் புத்தகமாக, "இரும்பு ஆலைப் பாடல்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இப்புத்தகத்தில் இப்பாடலும் "உயிர்த்தெழுந்த நாள் பண்டிகைப் பாடல்" என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டது. அதில் நான்கு வரிச் சரணங்கள் இருந்தன.

இப்பாடலை எழுதினபோது, இதில் வரிகளுக்கு இடையிடையே வரும், "அல்லேலூயா" என்ற வார்த்தை இல்லை. ஆனா, பின்னர் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்பில், அதின் நூலாசிரியர், உற்சாக தொனியோடு கர்த்தரைத் துதித்துப்பாட, இதைச் சேர்த்தார்.

இப்பாடலுக்கு "ஈஸ்டர் பாடல்" என்ற ராகம் இணைக்கப்பட்டது. இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.

சார்லெஸ் வெஸ்லி எழுதிய மற்றொரு பண்டிகைப் பாடல், "கேள் ஜென்மித்த ராயர்க்கே" (Hark! the Herald Angels Sing) என்ற கிறிஸ்மஸ் பாடலாகும்.

 


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com