உ.. ய் ஒரு விசில் சத்தம் கேட்டதும் உயரமான இடத்திலிருந்து ஒவ்வொருவராக எதிரே உள்ள நீர்த்தாடகத்தில் குதிக்கின்றனர்.
ஆம். இது ஒரு ராணுவ கமாண்டோவிற்குக் கொடுக்கப்படும் பயிற்சி. இவ்வளவு உயரத்திலிருந்து எப்படிக் குதிப்பது? தொட்டியில் போதுமான ஆழம் இருக்குமா? ஏன்று பயந்து. விசில் சத்தம் கேட்டபின் தாமதித்தால், தாமதிக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
நமது சேனைகளின் கர்த்தரின் படையிலும் அப்படிப்பட்டப் பயிற்சி உண்டு. தாமதமற்றக் கீழ்ப்படிதலையும் தேவன் எதிர்பார்க்கிறார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி 2: 8)
முறுமுறுப்பில்லாது முற்றிலும் கீழ்ப்படிவோம். “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத் 14: 14)
நாமும் கீழ்படிவோமா?