தூக்கி எறியப்பட்ட வேதம்
Mr.Arul Manohar
Reaching out people

படைவீரர்கள், ரயில் பிரயாண  நேரங்களில், நகைச்சுவையாகப் பேசி ஜாலியாக வருவது வழக்கம். அன்றும் சில வீரர்கள் அவ்வாறு பயணம் செய்தபோது, புதிதாக படையில் சேர்ந்த இளம் படைவீரன் ஒருவன், தன் சிறிய வேதப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். சக வீரர்கள் இந்த பக்திமானிடம் விளையாடலாம் என்று கூறி வேதபுத்தகத்தை ஐன்னல் வழியாக வெளியே எறிந்தனர்.

ஒரு நிமிடம் நடந்துவிட்டது! வேதபுத்தகம் தண்டவாளத்தின் மேல் கிடந்தது! அந்த வாலிபன் கோபமடைந்தான்? இல்லை. அவனுக்குத் துணை செய்யும் இயேசு நான் சாந்தமும், மனததாழ்மையும்மாய் இருக்கிறேன் என்று கூறினாரல்லவா?(மத்11:29)அவன் துக்கமடைந்தான். ஆனாலும் அமைதலாயிருந்தான்.

ஒரு சில நாட்களுக்குப் பின்பு அந்த வாலிபனுக்கு ஒரு தபால் வந்தது. அதில் அவன் வேதபுத்தகமும், ஒரு கடிதமும் இருந்தது. ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர் அந்த பார்சலை அனுப்பியிருந்தார். தான் தன்டவாளங்களில் வேலை செய்பவர் என்றும், அந்த வேதத்தைக் கண்டு, வாசித்தபோது ஆண்டவரின் சத்தத்தைக் கேட்டதாகவும், அவர் தன் தவறுதல்களுக்காக, வேதனையடைந்து இயேசுவை ஏற்றுக்கொண்டதாகவும் எழுதியிருந்தார். இப்பொழுது அந்த இளம் வாலிபனுக்கு ஏன் தன் வேதபுத்தக்கம் தன்னை விட்டு சிலநாள் பிரிந்தது என்பதை அரிந்து கொண்டான். சாத்தான் மீண்டும் தோற்றுப்போனான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.


Mr.Arul Manohar with heart to Serve Lord has been in the ministry for over 2 decades. Working at Evangelical Union ( EU ), was the editor for their Tamil Magazine and their National English Magazine. Now he is Serving the Lord as General Secretary of Evangelical Union.