அதிகாலையில் எழும்பும்போது, விழிப்போடு இருக்கவேண்டுமென்றால் இரவில் சீக்கிரத்தில் படுக்கைக்கு செல்லவேண்டும். சில காரணங்களினால் அப்படி முடியாவிட்டால் இரவில் Fresh ஆக இருக்கும்போது தனிஜெப, வேத தியான வேளையை திட்டமிட்டு கடைப்பிடிக்கவேண்டும். தூக்கம் வந்தால் முகத்தைக் கழுவி தூக்கம் வரமுடியாத நிலையில் முழங்காலில் நிற்கலாம். அல்லது நின்று கொண்டு சில பாடல்களைப்பாடி துதிக்கலாம். ஒரு சில அடிகள் முன்னும்பின்னுமாக நடந்துகொண்டு தூக்கம் களையும் வரை வசனங்களை சொல்லிப்பார்க்கலாம். தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான்
|