Do You know

4 சுவிசேஷங்களிலும்

நான்கு சுவிசேஷங்களிலும் மொத்தம் 89 அதிகாரங்கள் உள்ளன
அதில், 4 அதிகாரங்கள் அவருடைய முதல் 30 வருட வாழ்க்கையைப் பற்றியும்,
85 அதிகாரங்கள் அவருடைய 3 வருட வாழ்க்கையைப் பற்றியும்
28 அதிகாரங்கள் அவருடைய கடைசி 8 நாள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


ஆடோனாய் ஜெஹோவா

"ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் " ( ஆதியாகமம் 15:1)
இந்த வசனத்தில் "கேடகம்" என்ற வார்த்தைக்கு ஆடோனாய் ஜெஹோவா (Adonai Jehovah) என்ற வார்த்தை எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆடோனாய் (Adonai) என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் மட்டுமே 340 முறை வருகிறது. பாபிலோனின் கொடிய நான்கு ராஜாக்களின் அம்புகளாலும், ஈட்டியாலும், பட்டயத்தாலும் தன் உயிருக்கு, தன் குடும்பத்திற்கு சேதம் வந்து விடுமோ? என்ற பயத்தோடு இருந்த ஆபிரகாமை தைரியப்படுத்துகிற கர்த்தர், நானே உன்னை பாதுகாக்கிற ஆடோனாய் (Adonai) - ஆண்டவர் என்று கூறுகிறார்.
- - ஆவிக்குரிய பேராயுதங்கள் ( எழுதியவர்: பாஸ்டர் மா.ஜான்ராஜ்) என்ற புத்தகத்திலிருந்து


எரேமியா என்றால்

எரேமியா என்றால் தேவன் நியமிக்கிறார் அல்லது ஏற்படுத்துகிறார் என்பது பொருள்.இல்கியா என்ற ஆசாரியனுக்குப் பிறந்த இவர் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவர். எருசலேமிற்கு 5 கிலோமீட்டர் தொலைவிலுருந்த ஆனதோத் இவருடைய ஊர். தேவன் இவரை வாலிப வயதில் தேவன் அழைத்தபோது "நான் சிறுவனாயிற்றே! இந்த சிறுவயதில் என்னை இந்த பெரிய ஊழியத்திற்கு அழைக்கிறீரே, ஆண்டவரே எனக்கு பேசத்தெரியாதே" என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயன்றார். ஆனால் தேவன் அவரை விட்டுவிடவில்லை.
- "தீர்க்கதரிசன புத்தகங்கள் ஓர் அறிமுகம்" ( எழுதியவர் : Dr. Selwyn ) என்ற புத்தகத்திலிருந்து


ஆசியாவிலே முதன்முதலில்

தாய் மொழி கற்காமல் சுவிசேஷத்தை இவர்களுக்கு சொல்லமுடியாது என்பதை நன்கு உணர்ந்த சீகன்பால்க் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து மண்தரையில் அமர்ந்து எழுத்துக்களை எழுதிக் கற்றார். இரண்டு வருடத்தில் தமிழ் வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதியும் தமிழ் இலக்கண புத்தகத்தையும் வெளியிட்டார். இவரது ஊழியங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை பாராட்டி ஆசியாவிலே முதன்முதலில் அச்சடிக்கும் இயந்தரம் 1712-ம் ஆண்டு தரங்கம்பாடிக்கு இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அச்சு இயந்தரம் மூலம் புதிய ஏற்பாடு, முதல் நாட்காட்டி பாட்டு புத்தகங்கள் போன்றவை அச்சடிக்கப் பட்டன.
- --மறக்க முடியாஅத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு)